உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் படைப்புகள்
சென்னை, ஜன.13: பக்தி இலக்கியப் படைப்பாளியான உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் படைப்புகள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. "விநாயகனே வினை தீர்ப்பவனே...', "நீ அல்லால் தெய்வமில்லை-முருகா', "சின்னஞ்சிறு பெண்போ
சென்னை, ஜன.13: பக்தி இலக்கியப் படைப்பாளியான உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் படைப்புகள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
"விநாயகனே வினை தீர்ப்பவனே...', "நீ அல்லால் தெய்வமில்லை-முருகா', "சின்னஞ்சிறு பெண்போலே', "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா', "மதுரை அரசாளும் மீனாட்சி', "வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்' போன்ற பக்திப் பாடல்களையும், "ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', "அனுமன் சாலிஸா', "கனகதாரா ஸ்தோத்ரம்' போன்றவற்றின் மொழிபெயர்ப்புகளையும் படைத்தவர் கலைமாமணி உளுந்தூர்ப்பேட்டை சண்முகம். எளிய மொழியில், இனிய தமிழில் தமிழிசையை அறிமுகம் செய்துவைத்தவர் இவர். ஏறக்குறைய 4,000 பக்திப் பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். சிவபெருமான், ஷீரடி சாய்பாபா, அம்மன், முருகர், இயேசுநாதர் மீது பாடல்கள் புனைந்துள்ளார்.
அவரது மகன் சாதகப்பறவை சங்கர், மகள் சகோதரி பிரித்திகா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் அவரது படைப்புகளை 32 நூல்களாக நெய்தல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. "மாதாவே மரியே', "மாசிலா ஏசு' ஆகிய கிறிஸ்தவ இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
சென்னை புத்தகக் காட்சியில் நெய்தல் பதிப்பக அரங்கில் இப்புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.