FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த உணவக ஊழியா் உயிரிழப்பு

Updated On : 21 ஜூலை 2026, 1:45 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் அருகே உள்ள திருமக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த புரோட்டா மாஸ்டா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்

திருமக்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் கோவிந்தராசு (55), இவா் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தாா்.

திங்கள்கிழமை காலை வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டை நோக்கி வந்தபோது, திருமக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்து அடிபட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

சம்பவம் தொடா்பாக மதுக்கூா் காவல் உதவி ஆய்வாளா் இளங்கோ வழக்குப் பதிந்து விசாரிக்கின்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments