FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கோயம்பேட்டில் ஆப்பிள் லாரி கவிழ்ந்து விபத்து

சென்னை கோயம்பேட்டில் ஆப்பிள் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். சென்னை

Updated On : 29 ஜூன் 2018, 4:18 am IST
சென்னை கோயம்பேடு அருகேயுள்ள மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த ஆப்பிள் ஏற்றி வந்த சரக்குப் பெட்டக லாரியை மீட்கும் பணியில் போக்குவரத்து போலீஸார்.
பகிர்:

சென்னை கோயம்பேட்டில் ஆப்பிள் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். சென்னை துறைமுகத்திலிருந்து சரக்குப் பெட்டக லாரியொன்று ஆப்பிள்களை ஏற்றிக் கொண்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வியாழக்கிழமை அதிகாலை வந்தது. கோயம்பேடு பாலத்தில் செல்லும்போது நிலைதடுமாறி பாலத்தில் கவிழ்ந்த லாரியில் இருந்த ஆப்பிள்கள் சாலையில் விழுந்து சிதறின. இதில் லாரி ஓட்டுநர் காஞ்சிபுரம், மங்களம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபு (25) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோயம்பேடு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணிநேர போராட்டத்துக்கு பின்னர், மேம்பாலத்தில் இருந்து சரக்குப் பெட்டக லாரி அகற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments