வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம்
சென்னை உள்பட 15 வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உள்பட 15 வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்) திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலராக டி.அறிவழகன் ( சென்னை வடக்கு), வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக என்.ராமகிருஷ்ணன் (ராணிப்பேட்டை), தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலராக எஸ். மன்னர்மன்னன் (கோவில்பட்டி), சென்னை வடகிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக டி.மாதவன் (சென்னை தெற்கு), ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலராக கே.பட்டப்பசாமி (ஸ்ரீரங்கம்), திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஏ.பாண்டியன்(ஈரோடு), ஸ்ரீபெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஆர்.சௌந்திரராஜூ (விழுப்புரம்), பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஜி.சம்பத்குமார் ( செங்குன்றம்), செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஜெ.சசி (நெல்லை), ஈரோடு அமலாக்கப் பிரிவு அலுவலராக ஜி.ரங்கநாதன் (தூத்துக்குடி), சென்னை வடக்கு அமலாக்கப் பிரிவு அலுவலராக எஸ்.மோகன்(வாணியம்பாடி), சென்னை மேற்கு அமலாக்கப் பிரிவு அலுவலராக கே.எம்.பிரபாகரன் (சென்னை வடகிழக்கு), விருதுநகர் அமலாக்கப் பிரிவு அலுவலராக கே.முருகன் (நாகர்கோவில்), விழுப்புரம் அமலாக்கப் பிரிவு அலுவலராக கே.எஸ்.துரைசாமி (நாமக்கல் தெற்கு), ஸ்ரீரங்கம் அமலாக்கப் பிரிவு அலுவலராக ஜி.வெங்கடேஸ்வரன் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், சில வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.