பராமரிப்புப் பணி: 30-ஆம் தேதி வரை அரும்பாக்கம் மின் மயானம் மூடல்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரும்பாக்கம் மின் மயானத்தில் வியாழக்கிழமை (செப். 6) முதல் வரும் 30-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரும்பாக்கம் மின் மயானத்தில் வியாழக்கிழமை (செப். 6) முதல் வரும் 30-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சார்பில் அண்ணா நகர் மண்டலத்தின் அரும்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து மயான பூமியில் எரியூட்டும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பொருட்டும், சில பராமரிப்பு பணிகள் காரணமாகவும் வியாழக்கிழமை (செப். 6) முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மின் மயானத்தின் செயல்பாடு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் பொதுமக்கள் அண்ணா நகர், நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு இந்து மயான பூமி, நுங்கம்பாக்கம் இந்து மயான பூமியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.