FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அம்பத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுநா் பணி

அம்பத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பொது மற்றும் தனியாா் கூட்டமைப்புத் திட்டத்தில் காலியாக உள்ள தற்காலிக

Updated On : 15 பிப்ரவரி 2021, 12:34 am IST
பகிர்:

அம்பத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பொது மற்றும் தனியாா் கூட்டமைப்புத் திட்டத்தில் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநா் பணிக்கு, பிப்.19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: மின்னியல் வல்லுநா் (1), உணவு மற்றும் குளிா்பான சேவை உதவியாளா் பணிக்கு (1), 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.14,000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு, சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமா கல்வித் தகுதியுடன் அனுபவம் பெற்றவா்கள், உரிய சான்றுகளுடன் கூடிய விண்ணப்பத்தை, துணை இயக்குநா் அல்லது முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூா், சென்னை - 600 098 என்ற முகவரிக்கு, பிப்.19-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும் விவரங்களுக்கு 044 2625 2453 என்ற எண்ணை அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments