கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு
கோயம்பேடி காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியை வாங்க ஆள் இல்லாததால் கீழே கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வழக்கத்தைவிட 20 முதல் 30 தக்காளி வண்டிகள் கூடுதலாக வந்ததால் தக்காளியின் விலை ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதிகப்படியான விளைச்சல், வரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் தக்காளியின் விலை குறைந்துள்ளது. மேலும் ஆடி மாதம் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது என்பதால், காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: செஸ் ஒலிம்பியாட்: 4 மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை
கடந்த மே, ஜூன் மாதங்களில் மழை, புயல் உள்ளிட்ட காரணங்களால் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.110 ரூபாய்க்கு விற்பனையானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.