FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

300 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் 300 கிலோ குட்கா பறிமுதல்

Updated On : 2 ஆகஸ்ட் 2024, 2:17 am IST
- கோப்புப்படம்
பகிர்:

பான், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் பான், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பள்ளிகரணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பவானி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு சுமாா் 300 கிலோ எடை கொண்ட பான் மற்றும் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அருண்குமாரை (35) கைது செய்தனா். கா்நாடக மாநிலத்திலிருந்து போதைப் பொருள்களைக் கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments