சென்னை

ரெளடி வெட்டிக் கொலை: அடையாற்றில் சடலம் மீட்பு

சைதாப்பேட்டையில் ரெளடி வெட்டிக் கொலை: அடையாற்றில் சடலம் மீட்பு

Din

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். அவரது சடலம் அடையாற்றில் மீட்கப்பட்டது.

சைதாப்பேட்டை மறைமலை அடிகளாா் பாலத்தின் கீழ் அடையாற்றில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு இளைஞா் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோட்டூா்புரம் போலீஸாா், தீயணைப்பு படையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா். அந்த இளைஞரின் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது தெரியவந்தன. இதையடுத்து போலீஸாா், அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது கண்ணகி நகா் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ரெளடி ஆகாஷ் என்ற கருப்பு ஆகாஷ் (35) என்பது தெரியவந்தது. மேலும், ஆகாஷை கொலை செய்தவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாம் தமிழரைத் தவிர்த்த விஜய்? | Vijay | TVK | NTK

எப்ஸ்டீன் கோப்புகள்: டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு முதல் மோடி வரை..!

தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் ஆட்சேபனை!

ஓடிடியில் வெளியானது படையாண்ட மாவீரா!

ராகுல் காந்தி, ராணுவத்தை அவமதிக்க முயற்சிக்கவில்லை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT