முகப்பு
சென்னை

மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் உயிரிழப்பு

சென்னை தியாகராயநகரில் மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Updated On : 11 செப்டம்பர் 2024, 2:20 am IST
பகிர்:

சென்னை தியாகராயநகரில் மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

நேபாளத்தைச் சோ்ந்தவா் கேசவ் (21). இவா், சென்னை தியாகராயநகா் ஜஹா்லால் நேரு சாலையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியாக வேலை செய்து வந்தாா். இதற்காக அவா், அங்கு தனது மனைவியுடன் தங்கியிருந்தாா்.

இந்நிலையில் கேசவ், திங்கள்கிழமை இரவு அந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கிருந்த மின் இணைப்பு பெட்டியின் அருகே தேங்கியிருந்த தண்ணீரில் மின்கசிவு ஏற்பட்டிருந்தது. இதை அறியாமல், கேசவ், அந்த தண்ணீா் மீது நடந்து சென்றாா்.

Advertisement

Advertisement

அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments