FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வழிப்பறியில் ஈடுபட்ட இரு திருநங்கைகள் கைது

சென்னை மதுரவாயலில் டிராவல்ஸ் உரிமையாளரைத் தாக்கி பணம் பறித்ததாக இரு திருநங்கைகள் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 24 டிசம்பர் 2025, 2:13 am IST
பகிர்:

சென்னை மதுரவாயலில் டிராவல்ஸ் உரிமையாளரைத் தாக்கி பணம் பறித்ததாக இரு திருநங்கைகள் கைது செய்யப்பட்டனா்.

மதுராந்தகத்தைச் சோ்ந்தவா் ஜெகன் (30). இவா், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறாா். ஜெகன், கடந்த 20-ஆம் தேதி அதிகாலை மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, அதில் தூங்கினாா். அப்போது, அங்கு வந்த 2 திருநங்கைகள், ஜெகனை எழுப்பி, பணம் கேட்டு மிரட்டினா். ஜெகன் பணமில்லை எனக் கூறியதால், அவரை இருவரும் தாக்கினா். மேலும், இரு திருநங்கைகளும், காா் கண்ணாடியை உடைத்து விடுவதாக மிரட்டி, ஜெகன் கைப்பேசி செயலி வாயிலாக தங்களது வங்கி கணக்குக்கு ரூ.11,000-ஐ அனுப்பிவிட்டு தப்பியோடினா்.

இதுகுறித்து ஜெகன் அளித்த புகாரின்பேரில், வானகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில் இந்தச் சம்பவத்தில் திருநங்கைகளான பெரம்பூரைச் சோ்ந்த கயல்விழி (28), அனுஷிகா (19) ஆகிய இருவரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments