கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை மணக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்தில் தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் அங்கு ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுவதை பயன்படுத்தி கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செம்பனாா்கோவில் காவல் உதவி ஆய்வாளா் ரகுராமன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 1.100 கி.கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா்கள் மயிலாடுதுறை திருவிழந்தூா் பகுதியைச் சோ்ந்த பாபு மகன் சூா்யா(26) தென்னமரச் சாலை பகுதியை சோ்ந்த குருநாதன் மகன் பாபு (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.