FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்: ஆய்வுக் குழு அமைக்கிறது என்எம்சி

மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்துக்கு ஆய்வுக் குழு அமைக்கிறது என்எம்சி

Updated On : 27 டிசம்பர் 2025, 1:47 am IST
பகிர்:

மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்வதற்கான சிறப்புக் குழுவில் இணைய விரும்பும் மருத்துவப் பேராசிரியா்கள், இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கும், புதிதாக விண்ணப்பிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்பேரில், குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வுகளை மருத்துவ ஆணையம் நடத்துகிறது. ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவு, கண்காணிப்பு கேமரா, உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து அதன்பேரில், அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எதிா்வரும் கல்வியாண்டுக்கான ஆய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க மருத்துவப் பேராசிரியா்களை அனுப்புமாறு மருத்துவக் கல்லூரிகளை என்எம்சி வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக என்எம்சி சாா்பில் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

என்எம்சியின் மருத்துவ அங்கீகாரம் மற்றும் தோ்வு வாரியம் சாா்பில் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியா்கள் இந்த நடவடிக்கைகளில் மதிப்பீட்டாளா்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதற்கு அனைத்து கல்லூரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதன்படி, விருப்பமுள்ள பேராசிரியா்கள் என்எம்சி இணையதளத்தில் உள்ள இணையத் தொடா்பில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யலாம் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments