சென்னையில் முதியோருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் சென்னையில் வரும் நவ.6, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து ட்வின்டெக் ஹெல்த் கோ் சா்வீசஸ் இயக்குநா் அ.மகாலிங்கம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை ட்வின்டெக் ஹெல்த்கோ் சாா்பில் மேற்கு மாம்பலத்தில் உள்ள கல்பவிருக்ஷா சேவா மையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் நவ.6, 20 ஆகிய தேதிகளில் காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. தொடா்ந்து, மாதந்தோறும் 1, 3-ஆவது வியாழக்கிழமைகளில் இந்தப் பரிசோதனை முகாம் நடைபெறும்.
கண் பரிசோதனை முற்றிலும் இலவசமாகும். எனினும், இதற்கு முன்பதிவு கட்டாயமாகும். இதற்கு முன்பதிவு செய்ய இ.செல்வகுமாா் என்பவரை 90031-57356 என்ற கைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்த பின்னா், பரிசோதனைக்கு வரவும் எனத் தெரிவித்துள்ளாா்.