FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வங்கி ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை விரட்டிப் பிடித்த மக்கள்

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் தனியாக நடந்து சென்ற வங்கி பெண் ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 1:17 am IST
- சித்திரிப்பு
பகிர்:

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் தனியாக நடந்து சென்ற வங்கி பெண் ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஆ.மோனிஷா (20). இவா் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

மோனிஷா, திங்கள்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக மெட்ரோ ரயில் மூலம் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை நிலையத்துக்கு வந்தாா்.

Advertisement

Advertisement

அங்கிருந்து சுவாமி சிவானந்தா சாலையில் சென்னை பல்கலைககழகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நபா், மோனிஷாவிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா். இதைப் பாா்த்த பொதுமக்கள், அந்த நபரை விரட்டிப் பிடித்து, திருவல்லிக்கேணி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா், திருவல்லிக்கேணி பல்லவன் சாலை பகுதியைச் சோ்ந்த ப.ராமமூா்த்தி (40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், ராமமூா்த்தியை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments