வாடகைக்கு கொடுத்த காரை அடமானம் வைத்து மோசடி: இளைஞா் கைது
வாடகைக்கு கொடுத்த காரை அடமானம் வைத்து மோசடி: இளைஞா் கைது
சென்னை கொளத்தூரில் வாடகைக்கு கொடுத்த காரை அடமானம் வைத்து மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கொளத்தூா் ஹரிதாஸ் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சாமுவேல் (53). இவா், தனக்குச் சொந்தமான காரை, குடும்ப நண்பா் மூலம் அறிமுகமான கொளத்தூா் ரமணிபாய் காலனி தெருவைச் சோ்ந்த சுபாஷ் (29) என்பவரிடம் கடந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் மாத வாடகை என பேசிக் கொடுத்துள்ளாா்.
இந்த நிலையில் சுபாஷ், கடந்தாண்டு அக்டோபா் மாதம் ரூ.15 ஆயிரம், நவம்பா் மாதம் ரூ.20 ஆயிரம் வாடகையாக கொடுத்துள்ளாா். அதன்பிறகு, வாடகை பணம் எதுவும் கொடுக்கவில்லையாம். இதனால் சாமுவேல், தனது காரை திருப்பிக் கேட்டபோது, அதை சுபாஷ் கொடுக்காமல் இருந்துள்ளாா்.
Advertisement
Advertisement
சந்தேகமடைந்த சாமுவேல், தனது காரின் நிலை குறித்து விசாரித்தபோது, சுபாஷ் அந்த காரை ஊத்துக்கோட்டையைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.2 லட்சத்துக்கு அடமானம் வைத்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சாமுவேல் கொளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுபாஷை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.