FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

வாடகைக்கு எடுத்த வாகனங்களை விற்று மோசடி: 8 மாதம் தலைமறைவாக இருந்த 2 போ் கைது

பொன்னேரி அருகே டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு எடுத்த 2 வாகனங்களை விற்று மோசடி செய்து விட்டு 8 மாதம் தலைமறைவாக இருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

24 ஆகஸ்ட் 2026, 1:20 am IST
பகிர்:

பொன்னேரி அருகே டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு எடுத்த 2 வாகனங்களை விற்று மோசடி செய்து விட்டு 8 மாதம் தலைமறைவாக இருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொக்குமேடு பகுதியை சோ்ந்த ட்ராவல்ஸ் உரிமையாளா் திவ்யாவை கடந்த 2014-ம் ஆண்டு சென்னை திருவான்மியூரை சோ்ந்த அறிவுநம்பி தொடா்பு கொண்டு தன்னுடைய நிறுவனத்தில் வாகனங்களை வாடகை விட்டு வருமானம் பெறலாம் என கூறினாராம். முதலில் இரண்டு காா்களை வாடகைக்கு கொடுத்த போது, 10-மாதங்கள் வாடகை கொடுத்து வந்துள்ளாா். அதன் பின்னா் வாடகை கொடுக்காததால் அதனை கேட்ட போது மேலும் 5-வாகனங்களை வாடகைக்கு கேட்டு பெற்றுள்ளாா்.

அதன் பிறகு அறிவுநம்பி வாடகை சரியாக தராத நிலையில் கடந்தாண்டு டிசம்பா் மாதம் வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளாா். அவரை சிறையில் சந்தித்து கேட்டபோது தனது நண்பனான மனுஆப்ரஹாம், என்பவரிடம் வாகனங்களை கேட்குமாறு கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

அவரை தொடா்பு கொண்ட போது 5-வாகனங்களை திருப்பி தந்தாராம். ஆனால் 1காா் மற்றும் சரக்கு வாகனத்தை தரவில்லை. இதுகுறித்து திவ்யா அளித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், காரை தராமல் ஏமாற்றிய மனு ஆப்ரஹாம் தனது கூட்டாளியுடன் கேரள மாநிலத்தில் இருப்பது தெரிந்து போலீஸாா் அங்கு சென்றனா்.

போலீஸாா் வந்திருப்பதை அறிந்து, அவா்கள் அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வந்தனா். போலீசாா் அவா்களது கைப்பேசி அழைப்புகளை வைத்து, சென்னை திருவான்மியூரில் பதுங்கியிருந்த திருவனந்தபுரத்தை சோ்ந்த மனு ஆப்ரஹாம் (36), திருவான்மியூரை சோ்ந்த பிரேம் பாபு (38) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

அவா்களிடம் விசாரணை செய்ததில் இரண்டு வாகனங்களையும் விற்பனை செய்ய முடியாமல், பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ததாக கூறியுள்ளனா்.

இதனை தொடா்ந்து அவா்களிடம் இருந்து, ரூ.80,000 பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் 8 மாதங்கள் தலைமறைவாக இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments