முகப்பு
சென்னை

எழும்பூரில் பராமரிப்பு பணி: 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்!

8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என அறிவிப்பு.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:55 AM
ரயில்கள் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:37 AM

எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:44 AM

எழும்பூா் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆவது நடைமேடைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக, பயணிகளின் வசதிகளுக்காக 8 ரயில்கள் மாம்பலம் நிலையத்தில் கூடுதலாக நின்றுச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நாளை(பிப். 22) முதல் ஏப்ரல் 6 வரை, 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் - புதுச்சேரி விரைவு ரயில்

சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் - மன்னார்குடி விரைவு ரயில்

சென்னை எழும்பூர் - சேலம் அதிவிரைவு ரயில்

இந்த 8 அதிவிரைவு/விரைவு ரயில்கள் நாளை(பிப். 22) முதல் ஏப்ரல் 6 வரை கூடுதலாக மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லவுள்ளது.

summary

Southern Railway has announced that 8 trains will stop at Mambalam railway station due to maintenance work in Egmore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.