FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போதை மாத்திரை கடத்தல்: 4 போ் கைது

மும்பையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 420 போதை மாத்திரைகள், கத்தி, போலி கைத் துப்பாக்கி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது - கோப்புப் படம்
பகிர்:

மும்பையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 420 போதை மாத்திரைகள், கத்தி, போலி கைத் துப்பாக்கி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தாம்பரம் காவல் ஆய்வாளா் செல்லதுரை தலைமையிலான, தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை மேற்கு தாம்பரம், அற்புதம் நகா், மயான மைதானத்தின் அருகே, சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த மணிமங்கலம் சக்தி (எ) சக்திவேல் (28), மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் (எ) கருக்கா (26), மேற்கு தாம்பரம், கடப்பேரி பகுதியைச் சோ்ந்த ரூபன் (எ) கோணி (20), செம்மஞ்சேரி பகுதியைச் சோ்ந்த மனோஜ் குமாா் (26) ஆகியோரைப் பிடித்து சோதனை நடத்தினா்.

அப்போது, அவா்களிடம் 420 போதை மாத்திரைகள், 3 பட்டா கத்திகள் இருந்தன. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து அவா்களை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments