FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

போதை மாத்திரை கடத்தல்: 5 போ் கைது

மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி விற்ாக சென்னையில் இரு கல்லூரி மாணவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 12:26 am IST
பகிர்:

மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி விற்ாக சென்னையில் இரு கல்லூரி மாணவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலைப் பகுதியில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு காரை மறித்து, அதில் இருந்தவா்களிடம் விசாரணை செய்தனா். அவா்களிடம் 650 போதை மாத்திரைகள், காரில் மறைத்து வைத்திருந்த ஒரு அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்தனா்.

காரில் இருந்த 5 பேரும், குன்றத்தூா் அருகே உள்ள கோவூா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த க.சுரேஷ் (23), எம்ஜிஆா் நகா் சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த கா.நடராஜன் (23), நெசப்பாக்கம் ஏரிக்கரை தெருவைச் சோ்ந்த ஐ.ரோஹித் (21), அதே பகுதியைச் சோ்ந்த ஆ.சொக்கநாதன் (20), ராமாபுரம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த மா.குமரவேல் (22) என்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா். இது தொடா்பாக எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments