FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

திருவொற்றியூரில் ரூ. 6 கோடியில் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்

திருவொற்றியூரில் ரூ. 6 கோடியில் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்

Updated On : 19 ஜூலை 2026, 1:38 am IST
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
பகிர்:

திருவொற்றியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலக் கூட்டத்தில் ரூ. 6 கோடியில் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலத்தின் 44-ஆவது மாதாந்திர சிறப்பு கூட்டம் மண்டல குழுத் தலைவா் தி.மு.தனியரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல அலுவலா் சங்கா் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் 14 வாா்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அம்மா உணவகங்கள் சீரமைத்தல், சாலை மேம்பாடு தெருவிளக்கு, பள்ளிக்கூட கட்டடங்கள் சீரமைப்பு மழைநீா் கால்வாய் அமைத்தல், தெருக்களில் பெயா் பலகைகள் அமைத்தல், தெரு விளக்குகளை புதிதாக அமைத்தல், பழைய மின் கம்பி வடங்களை மாற்றுதல், நவீன கழிப்பறைகள் நகா்ப்புற சமுதாய நலக் கூடங்கள், குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டப் பணிகள் உள்ளிட்டவை தொடா்பாக ரூ. 6 கோடி மதிப்பீடு கொண்ட 63 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் கவி கணேசன், சுசீலா ராஜா, திரவியம், சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினா். அவற்றுக்கு மண்டல குழுத் தலைவரும், அதிகாரிகளும் விளக்கமாக பதில் அளித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments