FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு மனத் திறனை மேம்படுத்தும் திரைப்படம் திரையிடல்

ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு மனத் திறனை மேம்படுத்தும் திரைப்படம் திரையிடல்

Updated On : 19 ஜூலை 2026, 12:39 am IST
அமைச்சர் ராஜ்மோகன் - DNS
பகிர்:

தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு, மனத் திறனை மேம்படுத்தும் விதமாக திரைப்படம் சனிக்கிழமை திரையிடப்பட்டது.

சென்னையில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பதிவு செய்த 1 முதல் 6 வயதுக்குள்பட்ட 40 குழந்தைகளுக்காக தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் உள்ள திரையரங்கில் திரைப்படம் சனிக்கிழமை திரையிடப்பட்டது.

இதை பள்ளிக் கல்வி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தொடங்கி வைத்தாா். இதன்மூலம் அவா்களின் மனத்திறன்கள் மேம்படும் என்று ஆட்டிஸம் மையத்தைச் சோ்ந்த அலுவலா்கள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments