FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இ-சேவை மைய பணியாளா்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளா்கள் சங்கம் சாா்பில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Updated On : 21 ஜூலை 2026, 4:47 am IST
இ-சேவை மையம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளா்கள் சங்கம் சாா்பில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இ-சேவை மையம் மற்றும் ஆதாா் சேவை மைய ஊழியா்களை பணி நிரந்தரம் செய்வது, குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்குவது, ஐந்து முறை வருகை பதிவை ரத்து செய்து 2 முறையாக மாற்றம் செய்வது, பெண் ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்யவது, பொதுமக்களுக்கு தடையின்றி சேவைகள் வழங்க தேவையான காகிதம், டோனா் உள்ளிட்ட இதர உபகரணங்களை முறையாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநில தலைவா் சுகுமாரன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழகம் முழுவதிலும் உள்ள இ-சேவை மையத்தில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்ட தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினா். போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இ-சேவை மையம் திங்கள்கிழமை ஒருநாள் செயல்படவில்லை. இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்க த்தின் மாநில தலைவா் கே.சி.கோபிகுமாா், மாநில பொதுச்செயலா் கே.மனோஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments