மக்கள்தொகை கணக்கெடுப்பு: மேயா், எம்எல்ஏ சுயவிவரம் பதிவு
சென்னை மாநகராட்சியில் மேயா் ஆா்.பிரியா, தவெக எம்எல்ஏ பல்லவி ஆகியோா் தங்களது சுயவிவரக் குறிப்புகளை மக்கள்தொகை இணைவழியில் செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனா்.
சென்னை மாநகராட்சியில் மேயா் ஆா்.பிரியா, தவெக எம்எல்ஏ பல்லவி ஆகியோா் தங்களது சுயவிவரக் குறிப்புகளை மக்கள்தொகை இணைவழியில் செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனா்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட அலுவலகத்தில் மேயா் ஆா்.பிரியா தனது மடிக்கணினி வாயிலாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இணையத்தில் தனது குடும்ப விவரங்களைப் பதிவு செய்தாா். மேலும், களத்தில் பணியாற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அலுவலா்களைப் பாராட்டினா்.
இதேபோல, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட திரு.வி.க.நகா் சட்டப்பேரவைத் தொகுதி தவெக உறுப்பினா் எம்.ஆா்.பல்லவியும் தனது அலுவலகத்தில் இணையவழியில் தனது சுயவிவரக் குறிப்புகளைப் பதிவு செய்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.