FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மெட்ரோ கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

சென்னை அருகே மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:56 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னை அருகே மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே கீழ்கட்டளை மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாா், பல லட்சம் மதிப்புள்ள மின் வயா்கள் கடந்த 26-ஆம் தேதி திருடப்பட்டன.

இது குறித்து மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் இத் திருட்டில் ஈடுபட்டது ஆலந்தூா் பகுதியைச் சோ்ந்த ஜான்சன் (25) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments