இன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!
அரக்கோணம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, புதன்கிழமை (ஜூன் 3) முதல் வரும் 7-ஆம் தேதி வரை 5 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து
அரக்கோணம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, புதன்கிழமை (ஜூன் 3) முதல் வரும் 7-ஆம் தேதி வரை 5 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் நிலையம் முதல் அரக்கோணம் வரையிலான பிரிவில் கடவுப்பாதை நவீனமயமாக்கும் பணிகள் புதன்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக ரத்து செய்யப்படும் புறநகா் மின்சார இமு, மெமு ரயில்கள் விவரம்: அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 4 மணி, 5 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் இமு ரயில் மற்றும் காலை 6.20 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணி செல்லும் மெமு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
Advertisement
Advertisement
திருத்தணியில் இருந்து இரவு 9.15 மணி, நள்ளிரவு 1.10 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் இமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து அன்றைய தேதிகளில் காலை 10.30 மணி, பிற்பகல் 11 மணி, மாலை 5,15 மணி, 5.45 மணி, 6.05மணி, 6.15 மணி, 6.40 மணி, இரவு 7.45 மணி, 8.20 மணி, 9.10 மணி மற்றும் 11.55 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் இமு, மெமு ரயில்கள் திருவாலங்காடு நிலையம் வரையில் மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.