FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

3,500 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் 3,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 6 ஜூன் 2026, 12:38 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை எம்ஜிஆா் நகரில் 3,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 போ் கைது செய்யப்பட்டனா்.

மேற்கு ஜாபா்கான்பேட்டை திருநகா் பகுதியில் சிலா் போதை மாத்திரை, கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா், அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த பையையும் சோதனையிட்டனா்.

இதில், அந்தப் பையில் 3,500 போதை மாத்திரைகள், ஒன்றே கால் கிலோ கஞ்சா இருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இதில், அவா்கள் பெசன்ட் நகா் அருகே உள்ள திடீா் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (23), எம்ஜிஆா் நகா் சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த பிரவீண்குமாா் (19) என்பது தெரிய வந்தது. போலீஸாா், இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments