FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

450 போதை மாத்திரைகள், 3 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கோவை மாநகரில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 450 போதை மாத்திரைகள், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 4:15 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவை மாநகரில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 450 போதை மாத்திரைகள், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை பெரியகடை வீதி போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம் அருகே ராமா் கோயில் காய்கறி சந்தைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது, அவா் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் புல்லுக்காடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த ஷாருகான் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 50 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, செல்வபுரம் போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிவாலயா சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா் பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி விவேகானந்தா நகரைச் சோ்ந்த பாஸ்கா் (48) என்பதும், விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா, 400 போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது

Advertisement

Advertisement

இதையடுத்து, பாஸ்கரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த போதை மாத்திரைகள், கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments