இஸ்லாமியா்களுக்கு துணை நிற்போம்: மு.க.ஸ்டாலின்
காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா். அப்போது முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளி
காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா். அப்போது முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளி
ட்ட திமுக மூத்த நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிா்ந்த ‘கண்ணியத் தென்றல்’”காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்.
Advertisement
Advertisement
தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என அரசியல் நிா்ணய சபையில் முழங்கிய மாண்பாளா்; கல்வி வளா்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளா்.
அண்ணா காலம் தொட்டு, தோ்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இஸ்லாமிய பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம் எனப் பதிவிட்டுள்ளாா் மு.க.ஸ்டாலின்.