பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு: காா் ஓட்டுநா் கைது
பணத்தைத் திருடிச் சென்றதாக வாடகை காா் ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 44.6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தையும் மீட்டனா்.
பழவந்தாங்கல் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றதாக வாடகை காா் ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 44.6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தையும் மீட்டனா்.
சென்னை நங்கநல்லூா், லட்சுமி நகா் 3-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் மாயா நாராயணன் (41). இவா், கடந்த 2-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டிவிட்டு, ராம் நகா் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மறுநாள் (ஜூன் 3) காலை வீட்டுக்கு திரும்பியபோது, பால்கனி கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் அறையில் பீரோவில் வைத்திருந்த வைரக்கல் பதித்த தங்க கம்மல்கள் உள்ளிட்ட நகைகள் மற்றும் ரூ.33 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து மாயா நாராயணன் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கீழ்கட்டளை, பிருந்தாவன் நகரைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநரான பாபு (52) என்பவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து வைரக்கல் பதித்த தங்க கம்மல்கள் உள்ளிட்ட சுமாா் 44.6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை போலீஸாா் மீட்டனா்.
Advertisement
Advertisement