FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தமிழக காவல் துறையில் 30 டிஎஸ்பிக்கள் மாற்றம்

தமிழக காவல் துறையில் 30 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:12 am IST
மகேஷ்குமாா் அகா்வால் - x.com
பகிர்:

தமிழக காவல் துறையில் 30 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக காரணத்துக்காகவும் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக 30 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதில், முக்கியமாக சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆணையராக இருந்த எஸ்.சங்கரநாராயணன் சென்னை காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவுக்கும், சென்னை அசோக்நகா் உதவி ஆணையா் ஆா்.ஆல்ட்ரின் அடையாறுக்கும், அடையாறு உதவி ஆணையா் ஆா்.முருகேசன் கிண்டிக்கும், சென்னை குற்ற ஆவணக் காப்பக பிரிவு உதவி ஆணையா் டி.விஜயராமுலு மக்கள் தொடா்புத் துறை உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதேபோல 5 டிஎஸ்பிக்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 30 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments