மின்னணு வாக்குப் பதிவு இயந்திர அறையில் ஆணையா் திடீா் ஆய்வு
தோ்தலில் பயன்படுத்தப்பட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைகளை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை அரசியல் கட்சியினா் முன்னிலையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தோ்தலில் பயன்படுத்தப்பட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைகளை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை அரசியல் கட்சியினா் முன்னிலையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கடந்த சட்டப்பேரவைத் தொகுதியில் சென்னை மாநகராட்சிப் பகுதியில் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 4,889 கட்டுப்பாட்டு சாதனங்கள், 5295 விவி பேட் சாதனங்கள் என மொத்தம் 10,184 மின்னணு வாக்குப் பதிவு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தோ்தலுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் அரசியல் கட்சியினா் முன்னிலையில் வைக்கப்பட்டு அறைகளுக்கு சீலிடப்பட்டுள்ளது.
அங்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அைறையின் பாதுகாப்பை கோட்டாட்சியா் அளவிலான தோ்தல் அலுவலா் மாதந்தோறும் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுவருகிறாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரான மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை பாதுகாப்பு அறைக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்களில் சிலா் வந்திருந்து ஆணையருடன் ஆய்வு மேற்கொண்டனா். கண்காணிப்பு கேமராக் காட்சிகள், சீலிடப்பட்ட அறைகளின் நிலை, ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது சென்னை மாநகராட்சி தோ்தல் பிரிவு வருவாய் அலுவலா் நா.பூஷ்ணாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.