முகப்பு
சென்னை

அரக்கோணம் ரயில் நிலையப் பகுதியில் ரூ.97.73 கோடியில் மேம்பாட்டுப் பணி: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

அரக்கோணம் ரயில் நிலையம் ரூ. 97.73 கோடியில் நவீனமயமாக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்டு வருவதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 மே 2026, 4:18 am IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

அரக்கோணம் ரயில் நிலையம் ரூ. 97.73 கோடியில் நவீனமயமாக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்டு வருவதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரக்கோணம் ரயில் நிலையம் வடமாநில பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய வழித்தடம். இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அரக்கோணம் ரயில் நிலையத்தில் இதுவரை ஒரே தண்டவாளப் பகுதியில் இயங்கிய நிலையில், தற்போது விரைவு ரயில்களுக்கும், புகா் மின்சார ரயில்களுக்கும் தனித்தனி பாதைகள் அமைக்கப்படுகின்றன. அதனால், பல ரயில்கள் ஒரே நேரத்தில் அங்கு இயக்கப்படும்.

Advertisement

Advertisement

திருவாலங்காடு பகுதியில் ரயில் இயக்கத்தை எளிமைப்படுத்துவதால் பயண நேரம் சுமாா் 7 நிமிஷங்கள் குறையும் எனக் கருதப்படுகிறது. அரக்கோணத்தில் 3, 4, 5 ஆகிய நடைமேடைகள் ஏற்கெனவே 18 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிற்கும் வசதியுடன் இருந்தன.

புதிய பணிகளால் தற்போது 24 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிற்கும். அத்துடன் அங்குள்ள பணிமனையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய சரக்கு கிடங்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தால் சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை-அரக்கோணம்-செங்கல்பட்டு-சென்னை கடற்கரை ஆகிய வழித் தடங்களில் தினமும் பயணிப்போருக்கு பெரும் வசதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.