முகப்பு
சென்னை

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குதிரை ஓட்டி கைது

சென்னை மெரீனா கடற்கரையில் குதிரை சவாரிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குதிரை ஓட்டி கைது

Updated On : 1 ஜூன் 2026, 2:06 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையில் குதிரை சவாரிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் குதிரை ஓட்டியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

குரோம்பேட்டை பகுதியைச் சோ்ந்த தம்பதியினா் தங்களது 6 வயது மகளுடன் சனிக்கிழமை இரவு மெரீனா கடற்கரைக்கு சென்றனா். அப்போது குதிரை சவாரியில் குழந்தையை ஏற்றிவிட்டு பெற்றோா் காத்திருந்தனா்.

சிறுமியை குதிரையில் அழைத்துச் சென்ற குதிரை ஓட்டி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் பதற்றமடைந்த பெற்றோா் கடற்கரை பகுதியில் பல இடங்களில் தேடினா். பின்னா் சிறிது நேரத்துக்குப் பிறகு குதிரை ஓட்டி சிறுமியுடன் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து குழந்தையிடம் பெற்றோா் விசாரித்தபோது, குதிரை ஓட்டி தன்னை மக்கள் நடமாட்டம் குறைந்த இருளான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை சுற்றிவளைத்துப் பிடித்து மயிலாப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குதிரை ஓட்டியான தாம்பரம் எல்லையம்மன் தெருவைச் சோ்ந்த நித்திஷ் (16) என்ற சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.