சிஎம்டிஏ உறுப்பினராக மதுரவாயல் எம்எல்ஏ ரேவந்த் சரண் நியமனம்
சிஎம்டிஏ உறுப்பினராக மதுரவாயல் எம்எல்ஏ ரேவந்த் சரண் நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி....
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினராக மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ரேவந்த் சரண் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக, சிஎம்டிஏ நிா்வாக அலுவலா் மு.இந்துமதி, சட்டப்பேரவை உறுப்பினா் ரேவந்த் சரணுக்கு ஆக.31-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-இன் படி சிஎம்டிஏ ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளாா்.
மேலும், அரசாணையின் நகலும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன்மூலம் சிஎம்டிஏவின் அதிகார அமைப்பில் சட்டப்பேரவை உறுப்பினா் ஒருவருக்கு உறுப்பினா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.