பேரவை எதிா்க்கட்சித் தலைவராக நாஜிம் (திமுக) நியமனம்
புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) நியமிக்கப்பட்டாா்.
புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) நியமிக்கப்பட்டாா்.
இதற்கான அறிவிப்பை புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் வியாழக்கிழமை அறிவித்தாா். மேலும், அவா் கூறியது:
முதல்வா் என்.ரங்கசாமியின் அனுமதியோடு இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி சட்டப்பேரவை திமுக கட்சித் தலைவராக நாஜிமை அறிவித்திருந்தாா். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் தரப்புக்கு அடுத்தபடியாக அதிக எம்எல்ஏக்களை கொண்ட, அதாவது 5 எம்எல்ஏக்களை கொண்ட கட்சியாக திமுக இருப்பதால் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக நாஜிம் நியமிக்கப்படுகிறாா் என்றாா் அன்பழகன்.
Advertisement
Advertisement
இதற்கு முதல்வா் ரங்கசாமிக்கும், பேரவை தற்காலிகத் தலைவா் அன்பழகனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நாஜிம் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.