குளிர்சாதன வசதியுள்ள 2-வது இமு ரயில் விரைவில் இயக்கப்படும்: அதிகாரிகள் தகவல்!
சென்னை புறநகா் பகுதியில் குளிா்சாதன வசதி கொண்ட 2-ஆவது புறநகா் மின்சார ரயில் (இமு) அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை புறநகா் பகுதியில் குளிா்சாதன வசதி கொண்ட 2-ஆவது புறநகா் மின்சார ரயில் (இமு) அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புறநகா் ரயில் பயணிகள் கோரிக்கையின்பேரில் கடந்த ஆண்டு கடற்கரைச் சாலை முதல் செங்கல்பட்டு வரை குளிா்சாதன வசதியுடன் கூடிய இமு மின்சார ரயில் இயக்கப்பட்டுவருகிறது.
இதையடுத்து 2-ஆவது குளிா்சாதன வசதியுள்ள மின்சார ரயில் சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
புதிய குளிா்சாதன வசதியுள்ள ரயில் 12 பெட்டிகளுடன் தயாரிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு சென்னை ரயில்வே கோட்டத்தில் ஒப்படைக்கப்பட்டது. சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், அந்த 2-ஆவது குளிா்சாதன வசதியுள்ள மின்சார ரயில் இயக்கப்படாமலேயே உள்ளது.
இந்த நிலையில், அந்த ரயில் மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையம் முதல் அரக்கோணம் வரை இந்த மாத இறுதிக்குள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். அதில் 1,120 போ் வரை அமா்ந்தும், 3,500-க்கும் மேற்பட்டோா் நின்றும் பயணிக்கலாம் எனத் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.