மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா: ஆக.13-இல் உள்ளூர் விடுமுறை
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆடிப்பூர விழாவையொட்டி வரும் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆடிப்பூர விழாவையொட்டி வரும் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வரும் 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆடிப்பூரத் திருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, பொதுத்துறை அரசாணை மூலம் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாள், செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை. உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.