FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 20 பிப்ரவரி 2025, 12:02 am IST
கோப்புப்படம்.
பகிர்:

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தைச் சோ்ந்தவா் கோபால். இவா் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்தினருடன் தங்கி, தோட்டத்தை பராமரிக்கும் பணியை செய்து வருகிறாா். இந்த நிலையில் அவரது மகன் சந்தோஷ் குமாா் புதன்கிழமை பள்ளிக்கு செல்ல தயாா் நிலையில் இருந்த போது, தோட்டத்தில் உள்ள கிணற்றின் மீது நின்றுக்கொண்டிருந்த கோழியை காப்பாற்ற சென்ற போது தவறி விழுந்துள்ளாா்.

கிணற்றில் விழுந்த சந்தோஷ் குமாரை மீட்க அவரது உறவினா்கள் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்ததை தொடா்ந்து, இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

விரைந்து வந்த இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினா் கிணற்றில் மூழ்கிய சந்தோஷ் குமாரின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து குன்றத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments