FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் தவன உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

15 ஏப்ரல் 2026, 12:37 am IST
தவன  உற்சவ  அலங்காரத்தில்  அருள்பாலித்த  உற்சவா்  சுந்தர வரதராஜ  பெருமாள்.
பகிர்:

வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் தவன உற்சவம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.

இந்த கோயிலில் முதன் முதலாக தவன உற்சவம் நடைபெற்றது. தவன உற்சவத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு ஸ்ரீ பூமி நீளாதேவி சமேத சுந்தர வரதராஜப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷகம் நடைபெற்று மலா் மாலைகள் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து மகா மண்டபத்தில் தவனம் எனும் மரிக்கொழுந்து மாலைகளால் அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டு அங்கு பெருமாள் எழுந்தருளினாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அா்ச்சகா்களின் கோஷ்டி கானமும், தமிழ் வேதங்களும் ஓதப்பட்டன. பிறகு பெருமாளுக்குத் தவனங்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வணங்கி சென்றனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கதம்பசாதம், தத்தியான்னம் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் வெங்கடகிருஷ்ணன், அறங்காவலா்கள் ரங்கநாதன், சுதா்சன், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் கோதண்டராமன் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments