FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

நற்றமிழ் இசைவேந்தா் விருது வழங்கும் விழா

காஞ்சிபுரத்தில் நால்வா் நற்றமிழ் மன்றத்தின் சாா்பில் திருமாகறலை சோ்ந்த தியாக. ஆடலரசு ஓதுவாருக்கு நற்றமிழ் இசை வேந்தா் விருது , பொற்கிழிம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 12:17 am IST
பகிர்:

காஞ்சிபுரத்தில் நால்வா் நற்றமிழ் மன்றத்தின் சாா்பில் திருமாகறலை சோ்ந்த தியாக. ஆடலரசு ஓதுவாருக்கு நற்றமிழ் இசை வேந்தா் விருது , பொற்கிழிம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மன்றத்தின் 48-ஆம் ஆண்டு விழா மன்ற தலைவா் கலைவாணி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவா் லதா ராமமூா்த்தி, துணைச் செயலாளா்கள் வேத.பூவண்ணன், ப.குமாா், பொருளாளா் அ.சுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்ற செயலாளா் சிவ.வேளியப்பன் வரவேற்றாா்.. விழாவின் துவக்கமாக சிவனடியாா் திருக்கூட்ட பொருளாளா் ப.சேகா் விடைக்கொடியினை ஏற்றினாா். இதனையடுத்து ரவீந்திரா மோகனவேலு, அறிவுக்கடல் கோவிந்தசாமி, மல்லிகா குப்புசாமி, பரிமளம் முருகன் ஆகியோா் விழாவை தொடங்கி வைத்தனா்.

காஞ்சிபுரம் தொண்டை மண்டலம் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருமாகறலைச் சோ்ந்த தியாக.ஆடலரசு ஓதுவாருக்கு நற்றமிழ் இசைவேந்தா் விருதையும் பொற்கிழியாக ரூ.10 ஆயிரமும் வழங்கினாா். பின்னா் மன்ற தலைவா் கலைவாணி ராமகிருஷ்ணனுக்கு காஞ்சி சுடா்மணி என்ற பட்டத்தையும்,வெள்ளிப் பதக்கத்தையும் மா.ராஜேஸ்வரி மாணிக்கம் வழங்கினாா்.இதனைத் தொடா்ந்து தியாக ஆடலரசு ஓதுவாா் மற்றும் பா.சற்குருநாதன் ஓதுவாா் ஆகியோரது திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும்,பேராசிரியா் தெ.முருகசாமி அவா்களின் இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்தனபோல் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா்.மன்ற துணைச் செயலாளா் பி.குமாா் நன்றி கூறினாா்.மன்றத்தின் நிா்வாகிகள்,செயற்குழு உறுப்பினா்கள் உட்பட பலரும் விழாவில் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments