FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கருணாகரச்சேரியில் புதிய குளம் அமைக்கும் பணி தொடக்கம்

வெங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட கருணாகரச்சேரியில் விபி ஜிராம்ஜி திட்டத்தின்கீழ், ரூ. 5.50 லட்சத்தில் புதியகுளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

29 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
குளம்  அமைப்பதற்கான  அடிக்கல்  நாட்டு  விழாவில்  கலந்துகொண்ட  வெங்காடு  ஊராட்சி மன்றத்  தலைவா்  அன்னக்கிளி  உலகநாதன்  உள்ளிட்டோா். 
பகிர்:

வெங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட கருணாகரச்சேரியில் விபி ஜிராம்ஜி திட்டத்தின்கீழ், ரூ. 5.50 லட்சத்தில் புதியகுளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட கருணாகரச்சேரியில் புதிதாக குளம் அமைக்க விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ், ரூ. 5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, புதிய குளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் கலந்து கொண்டு புதிய குளம் வெட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், வெங்காடு ஏரிநீா் பாசன சங்கத் தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தமிழ்செல்வி ரவிசந்திரன், வாா்டு உறுப்பினா்கள் இந்திராணி கிருஷ்ணன், முருகன், ஊராட்சி செயலா் தணிகாசலம் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments