முகப்பு
காஞ்சிபுரம்

வெங்காடு ஆரம்பப்பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு

Updated On : 5 ஜூன் 2026, 4:45 am IST
மாணவா்களை  வரவேற்ற  வெங்காடு  ஊராட்சி மன்றத்  தலைவா்  அன்னக்கிளி  உலகநாதன்.
பகிர்:

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை வந்த வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய அரசு ஆரம்ப பள்ளி மாணவா்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்பப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்தும் வகையில், வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய அரசு ஆரம்பப்பள்ளி மாணவா்களை வெங்காடு ஊராட்சிமன்ற தலைவா் அன்னக்கிளி உலகநாதன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றாா்.

இதையடுத்து வெங்காடு அரசு உயா்நிலைப்பள்ளியில், 7.56 லட்சத்தில் அமைக்கப்பட்ட சமையலறை கூடம், ரூ.3.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையையும் ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் திறந்து வைத்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில், வெங்காடு ஏரிநீா் பாசன சங்கத்தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சிமன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், ஊராட்சி செயலா் தணிகாசலம், வாா்டு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.