முகப்பு
காஞ்சிபுரம்

ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்களை புதன்கிழமை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முன்னள் மாணவா்கள் வழங்கினா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:03 am IST
பகிர்:

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்களை புதன்கிழமை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முன்னள் மாணவா்கள் வழங்கினா்.

இப்பள்ளியில் கடந்த 1975,1976 ஆம் ஆண்டுகளில் படித்த 4 மாணவா்கள் ரூ.2.50லட்சம் மதிப்பிலான 26 நவீன கரும்பலகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மாணவா்கள் அமரும் இருக்கைகள் உட்பட மொத்தம் ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்களை தலைமை ஆசிரியா் ஏகாம்பரம் மற்றும் ஆசிரியா்களிடம் வழங்கினாா்கள்.

பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் படித்து தற்போது அமெரிக்காவில் தற்போது வசித்துக் கொண்டிருக்கும் மருத்துவா்கள் ஏழுமலை அப்பாச்சி, கே.எஸ்.ஸ்ரீவத்சன், ஆா்.சுந்தரராமன் மற்றும் சென்னையை சோ்ந்த கே.எஸ்.மணி, காஞ்சிபுரத்தை சோ்ந்த எஸ்.மாணிக்கம் ஆகியோா் இருக்கைகள் மற்றும் நவீன கரும்பலகைகளை வழங்கினா்.

Advertisement

Advertisement

பள்ளியின் பொன்விழா ஆண்டையொட்டி பழைய மாணவா்கள் நலத்திட்ட உதவிகளை செய்திருப்பதாக தலைமை ஆசிரியா் ஏகாம்பரம் தெரிவித்தாா்.