உத்தரமேரூா் அருகே ஆட்டோ டிரைவா் கொலை
உத்தரமேரூா் அருகே வனப்பகுதியில் ஆட்டோ டிரைவா் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
உத்தரமேரூா் அருகே பாப்பநல்லூா் வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இது குறித்து உத்தரமேரூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவா்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா் உத்தரமேரூா் அருகே பருத்திக் கொள்ளை கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ் குமாா் எனத் தெரிந்தது.
Advertisement
Advertisement
இவருக்கு கல்பனா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனா்.
மனைவி கல்பனா கொடுத்த புகாரின் பேரில் உத்தரமேரூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவா் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.