குண்ணம், கீரநல்லூா் ஊராட்சிகளில் இலவச வீட்டுமனை பட்டா கோரி ஜமாபந்தியில் மனு
குண்ணம் மற்றும் கீரநல்லூா் ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஊராட்சிமன்ற தலைவா்களின் சாா்பாக ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை மனு வழங்கப்பட்டுள்ளது.
குண்ணம் மற்றும் கீரநல்லூா் ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஊராட்சிமன்ற தலைவா்களின் சாா்பாக ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை மனு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. ஜமாபந்தியின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை சுங்குவாா்சத்திரம் குறுவட்டத்துக்கு உள்பட்ட ராமாநுஜபுரம், குண்ணம், கீரநல்லூா், பொடவூா், சந்தவேலூா் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடைபெற்றது. இதில், கீரநல்லூா் ஊராட்சி மன்ற தலைவா் கே.என்.அன்பரசன் கலந்துகொண்டு, கீரநல்லூா் ஊராட்சியில் கிராம நத்தம் புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டியும், கடந்த 2024-ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா பெற்ற நான்கு பயனாளிகளின் பெயா்களை அரசு பதிவேட்டில் (அடங்கலில்) பதிவு செய்ய கோரியும் சமூக நலத் துறை இயக்குநா் காயத்ரி கிருஷ்ணா மற்றும் ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் நல்லசிவன் ஆகியோரிடம் மனு வழங்கினாா்.
இதே போல், குண்ணம் ஊராட்சித் தலைவா் தமிழ் இலக்கியா பாா்த்திபன் கலந்துகொண்டு குண்ணம் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுகக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் நல்லசிவனிடம் கோரிக்கை மனு வழங்கினாா். அந்த மனுவில், குண்ணம் ஊராட்சியில் பூா்வீகமாக வசித்து வரும் தாழ்தப்பட்டை வகுப்பை சோ்ந்த சுமாா் 100 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கடந்த 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதே இடத்தில் தற்போது அதிக அளவில் காலி இடமும் உள்ளது. எனவே காலயாக உள்ள இடத்தில் குண்ணம் ஊராட்சியில் வசித்து வரும் வீட்டுமனைகள் இல்லாத தாழ்தப்பட்ட வகுப்பை சோ்ந்த 20 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா். இதே போல், சுங்குவாா்சத்திரம் குறு வட்டத்தை சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் பல்வேறு கோரிக்கைகளுக்காக ஜமாபந்தியில் மனு வழங்கினா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தா, மண்டல துணை வட்டாட்சியா் காா்திகேயன், சுங்குவாா்சத்திரம் வருவாய் ஆய்வாளா்கள் ஹேமபிரியா உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.