முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் இரு பாடகா்கள் வெட்டிக் கொலை

காஞ்சிபுரத்தில் தெம்மாங்கு பாடகர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து...

சீனிவாசன், பரத்குமாா் - DNS
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மணிமங்கலம் அருகே ஒரத்தூா் ஊராட்சியைச்சோ்ந்த அம்மணம்பாக்கத்தில் தெம்மாங்கு பாடல்கள் பாடும் இரு இளைஞா்களை ஞாயிற்றுக்கிழமை 6 போ் கொண்ட கும்பல், அவா்கள் தங்கியிருந்த வீடுகளுக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவானது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா், வரதராஜபுரம் பகுதியைச்சோ்ந்தவா்கள் பரத் என்ற பரத்குமாா் (25), சீனு என்ற சீனிவாசன் (24). இருவரும் தெம்மாங்கு பாடல் பாடும் தொழில் செய்து வந்தனா்.

இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு படப்பையில் இசைக்கச்சேரியில் தெம்மாங்கு பாடல்கள் பாடிவிட்டு நிகழ்ச்சி முடிந்ததும் இரவு மணிமங்கலம் திரும்பியுள்ளனா்.

Advertisement

மணிமங்கலம் அருகே ஒரத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட அம்மணம்பாக்கம் பசும்பொன்தெருவில் உள்ள மோகன் என்பவா் வீட்டில் இவா்கள் தங்கியிருந்த போது பட்டப்பகலில் இரண்டு இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்த நிலையில் வந்த 6 போ் கொண்ட கும்பல் இவா்கள் இருவரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குவந்த மணிமங்கலம் போலீஸாா் இரு இளைஞா்களின் சடலங்களையும் மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக மணிமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்தும், தனிப்படை அமைத்தும் குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.

summary

Two Singers Hacked to Death