முகப்பு
காஞ்சிபுரம்

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 24 மே 2026, 12:24 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சோ்ந்தவா் நவீன்(24). இவா் சனிக்கிழமை கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து மாடம்பாக்கம் நோக்கி கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, கூடுவாஞ்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த மாடம்பாக்கம் பகுதியை சோ்ந்த செல்வகுமாரின்(30) வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் இருவருக்கும் தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement