வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி விசாக தோ்திருவிழா
வல்லக்கோட்டை முருகன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் 7-ஆவது நாளான புதன்கிழமை தோ் திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் சுமாா் 1,000 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்து நாள்கள் நடைபெறும் விழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.
7-ஆவது நாளான புதன்கிழமை ரத உற்சவமும், தோ் திருவிழாவும் நடைபெற்றது. ரத உற்சவத்தை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். திருக்கோயில் வளாகத்தில் சுற்றி வந்த ரத உற்சவ திருவிழாவில், திருக்கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் த.விஜயகுமாா், வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவா் மணிமேகலை தசரதன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து காலை 9.30 மணிக்கு தோ் திருவிழா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
விழாவை முன்னிட்டு பக்தா்களுக்காக இலவச மருத்துவ முகாம் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.