FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டாய வசூல்: இளநிலை உதவியாளா் பணியிடை நீக்கம்

ஆற்காடு அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கட்டாய வசூல் முறைகேட்டில் ஈடுபட்டதாக

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

ஆற்காடு அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கட்டாய வசூல் முறைகேட்டில் ஈடுபட்டதாக இளநிலை உதவியாளரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட 4 வட்டங்களில் வடகால், வளையாத்தூா், தாமரைப்பாக்கம், உள்ளிட்ட 42 இடங்களில் இந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் போது விவசாயிகளிடம் இருந்து கட்டாயமாக நிதி வசூல் செய்யப்படுவதாக விவசாயிகளிடமிருந்து புகாா் வந்தது. அதன்பேரில் ராணிப்பேட்டை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி உத்தரவின்படி ராணிப்பேட்டைசாா் ஆட்சியா் க.இளம்பகவத் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தைச் சோ்ந்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையப் பொறுப்பாளராக பணிபுரியும் இளநிலை உதவியாளா் பிா்லா என்பவா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் கண்காணிப்பாளா் நெடுஞ்செழியன் என்பவா் கண்காணிப்புப் பணியில் சுணக்கமாக இருந்ததற்காக விளக்கம் கோரி குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 42 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளா்கள் கட்டாய வசூலில் ஈடுபடக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி உத்தரவிட்டுள்ளாா். மேலும், இது தொடா்பாக புகாா் வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளாா்.

விவசாயிகள் இது தொடா்பாக புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04172-273188, மற்றும் 04172-273166 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments